சுக‌ப் ‌பிரசவ‌ம் ஆக வ‌ழி

  • கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவம் ஆவதற்கு சில ஆசனப் பயிற்சிகள்   உண்டு. அவற்றை 7ஆம் மாதத்தில் இருந்து செய்யலாம்.ஆனால்     கர்ப்பிணிகள் ஆசனப்  பயிற்சி செய்துதான் சுகப்பிரசவம்ஆகவேண்டியதில்லை
  • கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி     படுத்திருந்து அப்படியே எழுவதோ மிகவும் தவறு.
  • முதல் 3 மாதங்களுக்கு ஒருக்களித்து படுத்தபடி இருப்பதுதான், கருவின்   வளர்ச்சிக்கு உதவும். அதேபோன்று, ஒருக்களித்த படியே கையை    ஊன்றித்தான்  எழுந்திருக்க வேண்டும். 
  • ருக்களித்தபடி படுக்கும் போது வயிறு தளர்வான நிலையில் இருக்கும்.   ஆனால் மல்லாந்து படுத்தால் வயிறு இழுத்த நிலையில் இருக்கும். அப்படி இருக்கும் போது கரு குழந்தையாக உருவாவதில் சிக்கல் ஏற்படும்.    அதன் பிறகும் மல்லாந்து படுப்பதை தவிர்க்க வேண்டும்.
  • ல்லாந்துபடுத்தால் குழந்தைக்கு குடல் சுற்றிக் கொள்ளும் ஆபத்து ஏற்படும்.அதேப்போல, ஒரு பக்கம் ஒருக்களித்து படுத்திருக்கும் போது அடுத்த  பக்கத்திற்கு அப்படியேத் திரும்பக் கூடாது. எழுந்து உட்கார்ந்து பிறகுதான் அடுத்த பக்கம் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். இது குழந்தை சுகப்பிரசவம் ஆக உதவும்.இப்போதெல்லாம் இந்த பழக்கத்தை நிறைய கர்ப்பிணிகள் கடைபிடிப்பதில்லை.அதனால்தான் குழந்தை தலை திரும்புவதில் பிரச்சினை ஏற்படுகிறது. தலை திரும்பாமல் இருந்தால் சிசேரியன் மூலமாகத்தான் பிரசவமாகும்.மேலும், எல்லோருமே குனிந்து நிமிர்ந்து வேலை செய்தாலேசுகப்பிரசவமாகும். 
  • வீட்டு வேலைகளை தாங்களாகவே செய்து கொண்டால்எல்லோருக்கும் சுகப்பிரவமாகும் வாய்ப்பு உள்ளது. அதேப்போல கர்ப்பிணிகள் ஏற்கனவே யோகாசனம் செய்து வந்து கொண்டிருந்தாலும்

  • முதல் மூன்று மாதங்களுக்கு செய்யக் கூடாது. அதன் பிறகும் எளிதான
       பயிற்சிகளை செய்யலாம்.ஆனால் கர்ப்பம் தரித்த பிறகு புதிதாக  யோகாசனம் செய்யவேக் கூடாது.
  • சுகப்பிரசவம் ஆவதற்கான ஆசனத்தையும் 7ஆம் மாதத்தில் இருந்து செய்யத் துவங்கலாம். ஆனால், சுகப்பிரசவம் ஆவதற்கு எந்த பயிற்சியும் தேவையில்லை.
  •           நீங்கள் சுறுசுறுப்பாக உங்கள் வேலைகளை செய்து கொண்டு       வந்தீர்களானால். ஒரு வேளை எந்த வேலையும் செய்யாமல்  இருப்பவர்களுக்குத்தான்  இந்த பயிற்சிகள் தேவைப்படும்.


  • மேலும், வீட்டில் குனிந்து நிமிர்ந்து செய்யும் வேலைகளான வீட்டை
       பெருக்குதல், துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்யும் போது     வயிறு சுருங்கி விரியும் தன்மையை பெறுகிறது.

0 comments:

Post a Comment