குழந்தை ஏன் அழுகிறது?

குழந்தைகள் சில சமயம் காரணம் இல்லாமல் அழுது கொண்டு இருக்கும் . சில பொதுவான காரணங்கள் 
  • வயிற்று வலி :: இது மிக முக்கிய காரணம் . பாட்டிலில் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அதிகமாக வரும் . விட்டு விட்டு வரும்
  • . இடை பட்ட நேரத்தில் நன்றாக விளையாடும் . வயிறு சிறிது ஊப்பிஇருக்கும் .          பால் குடிக்காது . பொதுவாக இது மாலைஇரவு நேரங்களில் வரும் .
  • முதல் நாள் வலி வந்த அதே நேரத்தில் அடுத்த நாளும் வரும் .4- 6 வார குழந்தைகளுக்கு இது அதிகமாக காணப்படும் .
  • அழும் போது குழந்தயை வலது புறமாகவோ ,குப்புற படுக்க வைத்தாலோ வலி குறையும்
  • காது வலி :இதுவும் மிக முக்கிய காரணம் . பாட்டிலில் பால் தருவது , சளி ,
    மூக்கு  அடைப்பு ஆகியவை முக்கிய காரணங்கள் ஆகும் . காது மடலை      தொட்டால் வலி  அதிகமாகி அழும் .
  • மூக்கு அடைப்பு : படுக்க வைத்தால் குழந்தை அழும் , நேராக வைத்தால் அழுகை குறையும் . மூச்சு விட திணறும் . பால் குடிக்க முடியாது . சளி இருக்கும் . அழுகை தொடர்ச்சி ஆக இருக்கும்

  • பூச்சி கடி: குழந்தை விடாமல் அழுதால் உடனே உடைகளை கழட்டி ஏதேனும் சிறு சிறு பூச்சி,
             எறும்பு உடலில் கடித்து சிவந்து உள்ளதாஎன பார்க்க வேண்டும் .

  • இதர காரணங்கள் :
  • தடுப்பூசி போட்டபின் வரும் வலி
  •      ஆசன வாய், பிறப்பு உறுப்பு ஆகிய இடங்களில் வரும் அரிப்பு .
  • சிறு சிறு கட்டி , கொப்புளங்கள்    
  •     இறுக்கமான உடைகள்      
  •     வெப்பநிலை மாறுபாடு -சூடான அல்லது குளிர்ச்சியான சூழ்நிலை                              
  •                வயிற்று வலி    .(drugs- colimex drops, cyclopam drops, coicaid drops, anafortan drops)
             காது வலி            (drugs- otogesic drops, ciplox drops, candibiotic drops)                      
  • மூக்கு அடைப்பு         treatment-nasoclear drops, nasion drops, otrivin drops)
                   
                    



0 comments:

Post a Comment