முகம் பளபளக்க...

  • ரோஜா இதழ் மற்றும் பாதாம் பருப்பை அரைத்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி வர, கரும்புள்ளிகள் மறையும்.
  •  கடலை எண்ணெய் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சம அளவு கலந்து அவற்றை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
  •  எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவி வர, அவை நாளடைவில் மறைந்து விடும்.
  •   கோதுமை தவிடுடன் பால் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.
  •   வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.
  •   பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.
  •   தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினாலும், முகம் பொலிவுடன் காணப்படும்.
  •   தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை நன்கு நைசாக அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கரும்புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
  •   சந்தனத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சம அளவுடன், பால் கலந்து பேஸ்ட் போல் குழைத்து கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தடவி, காய்ந்த பின் தண்ணீரால் கழுவ வேண்டும்
  •   வெள்ளரிச்சாறு, புதினா சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவைகளை சம அளவில் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் போய்விடும்.
  • ருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால், கரும்புள்ளிகள் நீங்கும். அதே போல் பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.
  •  எலுமிச்சம் பழச்சாற்றை வெதுவெதுப்பான பாலேட்டில் கலந்து முகத்தில் பூசி பதினைந்து நிமிடங்கள் ஊறிய பின் கழுவி வரவும்.
  •  பப்பாளிப் பழத்தை முகத்தில் பூசி ஊற வைத்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும்.
  •  தக்காளிப் பழத்தை அரைத்து கொஞ்சம் பால், எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் பூசி ஊற வைத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து கழுவி வரவும்.
  •  பச்சைப் பயறைத் தோலுடன் அரைத்து மாவாக்கி அதை நீரில் குழைத்து முகத்தில் நன்றாகத் தடவி ஊற விட்டு பதினைந்து நிமிடங்கள் கழித்துக் கழுவி வரவும். முகத்தில் எண்ணெய் வழியாது.
  • தக்காளியை அரை வேக்காடாக சமைத்து உண்டு வரவும். புத்துணர்ச்சியும் அளிக்கும்.

0 comments:

Post a Comment