குழந்தை ஆணா? பெண்ணா? எளிதில் கண்டுபிடிக்க

பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று தெரிந்துகொள்வதில் அனைத்து பெற்றோர்க்கும் ஆசைதான் இருந்தாலும் இது குறித்து வெளியே சொல்லக் கூடாது என்று சட்டம் சொல்கிறது. இருந்தாலும், பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கக் கூடாதா என்று ஏங்கும் குடும்பங்கள் பல. ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுத்துப் பார்த்தால்தான் குழந்தை எது? என்பதை உறுதி செய்ய முடியும்.
  • பெண்ணின் பிறப்புறுப்பின் பாதை மற்றும் அதில் சுரக்கும் திரவம் என்பது ஒன்று அமிலத்தன்மையாகவோ இல்லை காரத்தன்மையாகவோ இருக்கும்.
  • X - பெண் குழந்தைக்கான குரோமோசொம் அமிலத்தன்மை (Acidic) நிறைந்த திரவத்தில் அனாசயமாகவும் வேகமாகவும் நீந்தி முன்னேறும்.
  • Y - ஆண் குழந்தைக்கான குரோமோசோம் காரத்தன்மை (Caustic) நிறைந்த திரவத்தில் சிரமப்படாமல் நீந்தி போகும் மேலும் அமிலத்தன்மை நிறைந்த திரவநிலையில் அதனால் நீண்ட நேரம் நிடித்து வாழ இயலாது.
  • இப்போது சொல்லுங்கள் ஆணும் பெண்ணும் கூடும்போது பெண்ணின் பிறப்புறுப்பு பாதை மற்றும் சுரக்கும் திரவம் அமிலத்தன்மையாக இருந்தால் பெண் குழந்தையாகவும், காரத்தன்மை நிறைந்ததாக இருந்தால் ஆண் குழந்தையாகவும் பிறக்கும்
  • ஆனால், காமசூத்ராவின் தந்தை வாத்சாயனாரோ, சில அறிகுறிகளை வைத்தே பிறக்கப் போகும் குழந்தையை அடையாளம் கண்டு விடலாம் என்கிறார். அவர் கூறிய அறிகுறிகள் இவைதான்…
  • பெண்ணின் மாதவிலக்கிற்குப் பிறகு ஒற்றைப்படை நாளில் உறவு கொள்ள பெண் குழந்தை பிறக்கும். இரட்டைப்படை நாளில் உறவு கொண்டால் ஆண் குழந்தை பிறக்கும்.
  • கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆண் என்றால், கர்ப்பிணியின் வலது பக்கம் மார்பகம் பருத்துப் போய் காணப்படும். அந்த மார்பகத்தில் உள்ள பால் கலங்கலாகவும், வெண்மையாகவும் இருக்கும்.
  • இதேபோல், அந்த கர்ப்பிணியின் சிறுநீர் முந்தைய நிறத்தை இழந்து பல நிறமாக மாறும். அத்துடன், குழந்தை தனது வயிற்றில் வலது பக்கம் இருப்பது போன்று அவளுக்குத் தோன்றும். அவள் படுக்கையில் இருந்து எழும்பும் போதும், அமரும் போதும் வலது கையையே ஊன்றுவாள். அவளது மார்பகப் பாலில் ஒரு துளியை எடுத்து தண்ணீரில் விட்டால் அது மிதக்கும்.
  • கர்ப்பிணியின் இடது மார்பகம் பருத்துக் காணப்படுவதும், அவளது தேகத்தில் அதிக சோம்பல் ஏற்படுவதும், தின்பண்டங்கள் மீது ஆசை ஏற்படுவதும், அடிக்கடி பொய்ப்பசி தோன்றுவதும் பெண் குழந்தைக்கான அறிகுறிகளாகும். இதேபோல், அவள் படுக்கையில் இருந்து எழும்பும் போதும், உட்காரும போதும் இடது கையையே ஊன்றுவாள்.
 சீனாவிலுள்ள பீஜீங்கில் அகழ்வாராய்ச்சியின் போது ஒரு அரசக் கல்லறையிலிருந்து எடுக்கப்பட்ட பல பொருட்களில் கருவுற்ற அன்றே தனக்குப் பிறக்கப் போவது என்ன குழந்தை என்பதை அறிந்து கொள்ள உதவும் அட்டவணையும் ஒன்று. இந்த அட்டவணையை வைத்து 18 வயது முதல் 45 வயது வரையிலான பெண்கள் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் கருவுற்றால் பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை அறிந்து கொள்ள முடியும். இந்த அட்டவணையின் மூலப்படிவம் பீஜிங்கிலுள்ள இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது



1 comments:

ஆண் பிள்ளையை பெற்றவரா? Having a Male child? | Son | Parents | Future | Savings | Tamil | Unlock360
https://www.youtube.com/watch?v=LWBGrBQrx-U

 

Post a Comment